LYRIC

Yesuvin Rattam Christian Song Lyrics in Tamil

நம்மேல் இயேசு ரத்தம்
நிரந்தரமானது
பாவத்தை வெறுத்து
நாம் வாழ பழகணும்

1.பாவத்தின் மேல் பாவம்
இறுதி வாழ்வோ மரணம்
மனம் திரும்பி வாழ
ஒப்புவிப்போம்
பரலோக ராஜ்யம்
நம்முன் சமீபமே
அவனவன் கிரியைகள்
பலனோ அவரோடு

2.உலகின் வாழ்வின் பலனோ
எரியும் அக்கினி சூளையில்
ஆயத்தமில்லா
கன்னியை போல நாமும்
வாழ்ந்தால் அறியேன் என்பாரே
கைவிடப்படுவோமே
இயேசு கதவை அடைப்பாரே

3.கோர சிலுவையில் பாடுகள்
அன்று சகித்தார் நமக்காய்
மரணத்தை அவர் வென்றாரே
உயிரோடு இயேசு எழுந்தாரே
மீண்டும் வந்திடுவார் – இயேசு
நியாயம் தீர்த்திடுவார்

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yesuvin Rattam Song Lyrics