LYRIC

Vazhvil Nilai Ariya Neram Christian Song Lyrics in Tamil

வாழ்வின் நிலை அறியா நேரம்
வாழ்க்கை துணையாக வந்த தெய்வம் நீரே (2)

கண்ணீரின் பள்ளத்தாக்கில் கடல் நடுவில் தொலைந்த எந்தன் வாழ்வை
கறை சேர்த்த எந்தன் அன்பு இயேசுவே (2)

………….வாழ்வின்

ஆயிரம் பதினாயிரம் பேரில் என்னை
பெயர் சொல்லி அழைத்த அன்புஇயேசுவே
பாவ சேற்றில் விழுந்த என்னை கழுவி
உந்தன்மடியினிலே தவழ செய்த இயேசுவே (2)

உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆர்ப்பரிப்பேன்2
உயிருள்ள நாள் வரையில் அர்ப்பணிப்பேன்-எந்தன் (2)

பிள்ளையாக வளர்த்து நீரும் என்னை
பிதா என்று அழைக்க செய்த இயேசுவே
கிருபையாலே எந்தன் வாழ்வை மாற்றி
மகிமையாக நடத்தும் அன்பு இயேசுவே (2)

உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆர்ப்பரிப்பேன்2
உயிருள்ள நாள் வரையில் அர்ப்பணிப்பேன்- எந்தன் (2)

ராஜாக்களாய் ஆசாரியராக என்னை
அபிஷேகம் செய்த அன்பு இயேசுவே
உலகத்தில் உம் நாமம் உயர்த்த
உயிர் தந்த எந்தன் அன்பு இயேசுவே (2)

உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆர்ப்பரிப்பேன்2
உயிருள்ள நாள் வரையில் அர்ப்பணிப்பேன்- எந்தன் (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Vazhvil Nilai Ariya Neram Christian Song Lyrics