LYRIC

Thiyangum Ullam Kandaar Christian Song in Tamil

தியங்கும் உள்ளம் கண்டார்
தயக்கம் என்ன என்றார்
திகைக்கும் என் மனதில்
திருவார்த்தை அருளித் தந்தார்

1. துதிப்பேன் என் கர்த்தரை
துதிசாற்றி மகிழ்ந்திடுவேன்
என்னைக் கண்டு மனதுருகும்
அன்பர் இயேசு அருகில் உண்டே

2. கதறும் ஆத்துமாவே
கலங்காதே என்றவரே
கலைமான்களும் கதறி அழும்
நீரோடை வாஞ்சிப்பதால்

3. அவர் எந்தன் கன்மலையே
அசையாத நல் பர்வதமே
அரும்பாவ உலகமதில்
அவர் அன்பதில் மறைந்திடுவேன்

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Thiyangum Ullam Kandaar Lyrics