LYRIC

Mannikka Therinthavarae Christian Song in Tamil

மன்னிக்க தெரிந்தவரே மனதுருக்கம் நிறைந்தவரே
கண்ணக்கு இமைபோல் எம்மைகாக்கின்ற இரட்சகரே
வழிபார்த்து நிற்கின்றோம் வாருங்க இயேசய்யா.. – 2
விழிநோகப் பண்ணாமல் விரைந்ததே நீர் வாருமைய்யா
இயேசு ராஜா என்னோடு பேசுராஜா
பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா – 2

1. கல்வாரி சிலுவையிலே (கர்த்தாவே ரத்தம் சிந்தி)
கருணையோடு எம்மைக்காக்க (சிலுவையில் ஜீவன்தந்தீர்)
இயேசு ராஜா என்னோடு பேசுராஜா
பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா – 2

வேண்டும் வரம் கேட்கின்றோம் மீண்டும் வரபார்க்கின்றோம் .. – 2
ஆண்டவரே வாருமைய்யா – அன்பு முகம் காட்டுமையா.. – 2
இயேசு ராஜா என்னோடு பேசுராஜா
பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா – 2

2. கூப்பிட்ட குரல்கேட்டு (குறை தீர்க்க வருபவரே)
கொடுமையான வியாதியையும் (குணமாக்கும் வைத்தியரே)
கண்ணீரின் பாதையிலே கரம் பிடித்து நடப்பவரே.. – 2
கண்ணோக்கிப் பாருமைய்யா கார்த்தாவே வாருமைய்யா .. – 2
இயேசு ராஜா என்னோடு பேசுராஜா
பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா – 2

3. மன்னிக்க தெரிந்தவரே மனதுருக்கம் நிறைந்தவரே
கண்ணக்கு இமைபோல் எம்மைகாக்கின்ற இரட்சகரே
வழிபார்த்து நிற்கின்றோம் வாருங்க இயேசய்யா.. – 2
விழிநோகப் பண்ணாமல் விரைந்ததே நீர் வாருமைய்யா – 2
இயேசு ராஜா என்னோடு பேசுராஜா
பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா – 3

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Mannikka Therinthavarae Lyrics