LYRIC

Paazhana Ulagathil Christian Song Lyrics in Tamil

பாழான உலகத்தில் வாழ்ந்திடும் நமக்கு
இவ்வேழு வார்த்தை போல் வேறில்லையே! (2)

1. பிதாவே என்று சொல்லி சிலுவையிலே
சிதைந்து தொங்கிய அந்த வேளையிலே (2)
நேசக்குமாரனின் வார்த்தையையே
பதிப்போம் நம் இதயமாம் பலகையிலே (2)

2. செய்வதறியாத துஷ்டர்களை
மன்னியும் பிதாவே இவர்களை (2)
கள்ளனே என்னோடே பரதீசிலே
இருப்பாய் என்ற மன்னிப்பின் வார்த்தைகளே (2)

3. ஸ்தீரீயே இதோ உன் மகன் என்றும்
சீஷனே இதோ உன் தாய் என்றும் (2)
ஆத்மாவில் பட்டயம் உருவினாற்போல்
பதறும் தாயை ஒப்புவித்து வார்த்தைகளே (2)

4. என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்
பிதாவும் விலகவே கதறினாரே (2)
முடிந்தது என உள்ளத்தில் அறிந்தபின்னே
தாக்கமாயிருக்கிறேன் என்ற வார்த்தைகளே (2)

5. பிதாவின் சித்தம் நிறைவான வேலையாகவே
முடிந்தது என்று குமாரன் நீர் தலை சாய்த்தீரே (2)
பிதா கையில் ஆவியை ஒப்புவிக்கிறேன்
மகா சத்தமாய் தன் ஜீவனை விட்ட வார்த்தைகளே (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Paazhana Ulagathil Christian Song Lyrics