LYRIC

Vaarthaiyile Unmai Ullavar Vakku Christian Song in Tamil

வார்த்தையிலே உண்மையுள்ளவர்
வாக்கு என்றும் மாறிடாதவர்
கிருபையாலே வரங்கள் தருபவர்
ஆவியாலே நடத்துகின்றவர்

அவரில் சார்ந்து கொள்ளவே
நேசம் கொள்ளவே – இருதயத்தை
திறந்து வைப்பாயோ – உன்னை
மீட்டுக்கொண்டார் வாழ்வு தந்தாரே
உன் ஜீவனை நீ கொடுக்கமாட்டாயோ?

1. நல்ல மேய்ப்பன் நானே என்று சொன்னார்
ஜீவ அப்பம் நானே என்று உரைத்தார்
மேய்ப்பன் சத்தம் கேட்கும் ஆடு போல
நேசர் சத்தம் கேட்க மாட்டாயோ

2. எக்காளம் தூதர் ஊதும் போது
வானத்திலே இயேசு வருவாரே
அந்த சத்தம் கேட்டு நாமும் கூட
அவரோடு சேர்ந்து கொள்வோமே

3. சோதனைகள் மேற்கொள்ளும் போது
சாத்தானே மிதித்துப் போடுவாயே
துன்பம் எல்லாம் இன்பமாக மாறும்
இயேசுவை நீ ஏற்றுக் கொள்ளும் போது

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Vaarthaiyile Unmai Ullavar Vakku Lyrics