LYRIC

Neenga Podhum Christian Song Lyrics in Tamil

உம்மை நேசிக்கிறேன்னு நான் சொன்ன
ஒரு வார்த்தைக்காக என் சிறுமையில என்ன நெனச்சீரே
இந்த உலக அன்பு ஏமாற்றி ஏங்கி நின்ற போது
நான் இருக்கேன் என்று ஓடிவந்தீரே

நீங்க போதும் நீங்க போதும் நீங்க மட்டும் போதும்
உங்க அன்பு அது வேணும் என் வாழ்நாள் முழுதும்

பாவியான நானும் உம் பாதம் அமர்ந்தேன்
கண்ணீரினாலே உம் கால்கள் நனைத்தேன்
பெரிதாய் எண்ணிய அனைத்தையுமே நான்
உம் பாதம் ஊற்றியே உம்மை மட்டும் நேசித்தேன்
உம் உள்ளம் மகிழ்ந்தீரையா
இயேசையா என் பாவம் மன்னித்தீரையா

புறஜாதி நானும் உம் முகம் பார்த்தேன்
நீரே என் தேவன் என்று நான் உரைத்தேன்
உம் ஜனம் யாவும் என் ஜனம் என்றேன்
என் வார்த்தையால் உம் உள்ளமதை சேர்ந்தேன்
உம் உள்ளம் நெகிழ்ந்தீரையா
இயேசையா என் சாபம் நீக்கினீரையா

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Neenga Podhum Song Lyrics