LYRIC
Vivarikka Mudiyatha lyrics by John Jebaraj
விவரிக்க முடியாத அழைப்பு இது
சொற்களில் புரியாத உறவு இது
அழைத்தவர் உடன்வரும் பயணம் இது
யாருக்கும் கிடைக்காத கிருபை இது
பெரியவரே அழைத்தவர் பெரியவரே
சொன்னதெல்லாம் பிழையின்றி செய்பவரே
பெரியவரே அழைத்தவர் பெரியவரே
இறுதிவரை என்னை சுமப்பவரே
1) அலங்கோலமாவேனென்று
நினைத்தவர் முன்
அலங்கமாய் மாறி நின்றேன்
கிருபையாலே
நான் நிற்பதை விரும்பிடும்
நல்ல தகப்பன் அவரே
நான் விழுந்திடாமல் தாங்கிடும்
அஸ்திபாரம் அவரே
2)என்னையும் அழைத்தாரென்பது அதிசயமே
யாருமே நம்பா என்னை நம்பினாரே
அவர் கிருபையை நினைக்கையில்
நன்றி மட்டும் வருதே
என்னை சுமப்பதை நினைக்கையில்
கண்ணீரும் வருதே
(என்னை சுமந்ததை நினைக்கையில்
கண்ணீரும் வருதே)
பெரியவரே அழைத்தவர் பெரியவரே
சொன்னதெல்லாம் எனக்காக செய்பவரே
சிறந்தவரே என் இயேசு சிறந்தவரே
சிறந்ததினை எனக்காய் செய்பவரே
காரணரே என் இயேசு காரணரே
உயர்வுக்கெல்லாம் முற்றும் காரணரே
No comments yet