LYRIC

Paaduven lyrics

பாடுவேன் பரவசமாகுவேன்,
பறந்தோடும், இன்னலே -(2)

1) அலையலையாய் துன்பம் சூழ்ந்து,
நிலை கலங்கி ஆழ்த்தையில் –(2)
அலைகடல் தடுத்து நடுவழி விடுத்து –(2)
கடத்தியே சென்ற கர்த்தனை -(2) ….(பாடுவேன்)

2) ஒன்றுமில்லா வெறுமை நிலையில்,
உதவுவாரற்றுப் போகையில் –(2)
கன்மலை பிளந்து தண்ணீரை சுரந்து –(2)
தாகம் தீர்த்த தயவை -(2)….(பாடுவேன்)

3) வனாந்திரமாய் வாழ்க்கை மாறி,
பட்டினி சஞ்சலம் நேர்கையில் –(2)
வானமன்னாவால் ஞானமாய் போஷித்த –(2)
காணாத மன்னா இயேசுவை -(2) ….(பாடுவேன்)

4) என்று மாறும் எந்தன் துயரம்,
என்றே மனமும் ஏங்கையில் –(2)
மாராவின் கசப்பை மதுரமுமாக்கி –(2)
மகிழ்வித்த மகிபனையே -(2) ….(பாடுவேன்)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *