LYRIC

Isravelin Senaikalin Mun Nadantha Christian Song in Tamil

1. இஸ்ரவேலின் சேனைகளின் முன் நடந்த தெய்வமே,
எங்கள் சேனாபதியாக எங்கள் முன்னே செல்லுமே!

2. உம்மை நம்பி உம்மைச் சார்ந்து உம்மை மகிமைப்படுத்தவே,
அடியார் தொடுக்கும் வேலையை நீர் ஆசீர்வதிக்க வேணுமே!

3. ஸ்நானகன் யோவானோடேசு ஸ்நானம் வாங்கும் வேளையில்,
வந்தமர்ந்த வான் புறாவே வாரும் இந்த நேரத்தில்!

4. சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்த எங்கள் தெய்வமே,
உலர்ந்த தரையை எங்களுக்காய் ஒழுங்கு செய்ய வேணுமே!

5. அன்று நூற்றிருபதுபேர் சென்றதோர் மேல் வீட்டினில்,
வந்தமர்ந்த அக்கினியே வாரும் இந்த நேரத்தில்!

6. யோசுவாவின் போர்க்களத்தில் வீரனாய் முன் நின்றவா!
சந்திர சூரிய மண்டலங்கள் தரித்து நிற்கச் செய்தவா!

7. ஏழை எலியாவின் மேலே வல்லமையாய் நின்றவா,
பாரில் பாகால் கோபுரங்கள் அழித்துப் போடும் தெய்வமே!

8. புதிய வானம் புதிய பூமி ஆக்கி ஆள வருவாரே,
புதிய எருசலேமீதில் ஏழைகளைச் சேருமே!

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Isravelin Senaikalin Mun Nadantha Lyrics